முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட்லிக்கு அபார காழ்ப்புணர்ச்சி தான் பிளஸா..? இல்ல விஜயின் ரசிகன் என்பதா..?

எஸ்பிமுத்துராமன், ராஜசேகர், பி வாசு, ஹரி... இந்த இயக்குனர்கள் எல்லாரும் வேறு வேறு கால கட்டம். ஆனால் எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது இவர்கள் எடுத்த படங்கள் எல்லாமே லாஜிக் இல்லாத ஹீரோயிச மேஜிக் படங்கள். 





இந்த கதையை இப்படி சொன்னா ஓடும்னு இவங்களுக்கு தெரியும். ஊட்டி வரை உறவு கதையை பட்டி டிங்கரிங் பார்த்தா அது நடிகன். பெரிய இடத்து பெண் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தா அது சகலகலா வல்லவன். மணிசித்திரதாளு பட்டி டிங்கரிங் பார்த்தா அது சந்திரமுகி. இப்படி இவர்கள் எடுத்த படங்களில் பெரும்பாலும் இப்படித்தான். தெய்வமகன், அன்பே வா இப்படி பல படங்கள் அப்படியே சுடப்பட்ட படங்கள் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். 

அட்லி தன்னை அந்த வரிசையில் தான் சொல்கிறார். நான் வெற்றிமாறன்,மிஷ்கின், ரஞ்சித் டைப் இயக்குனர் இல்லை. ஹீரோயிச இயக்குனர் தான் என்கிறார். அவரின் முதல் படம் தவிர்த்த மற்ற படங்கள் எல்லாமே நல்ல கரம் மசாலா டைப் படங்கள் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

ஆனால் வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காத ஒரு காழ்ப்புணர்வு அவருக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு காரணங்கள். ஒன்று அவரின் தோற்றம். இரண்டு அவர் ஒரு நடிகரின் ரசிகனாகவே தன்னை காட்டிக்கொள்கிறார். அது காரணமாக இருக்கலாம். அல்லது அவரின் பேச்சில் ஒரு அட்டிட்டியூட் தெரியும் அதுவாக இருக்கலாம். ஆனால் அவர் கல்லூரி காலத்தில் இருந்தே உருவகேலியின் சிக்கியவர் என தெரிகிறது. அதனால் கூட இருக்கலாம். எதுவாயினும் அவருக்கு வரும் கிண்டல் கொஞ்சம் அதிகம் தான். 

விக்ரம் படம் வெளியாகி இரண்டாண்டுகளில் அதே கதை போக்குடன் வந்த ஜெய்லர் படத்தை மெகா ஹிட்டாக்கிவிட்டு அட்லியிடம் வந்து நீ அந்த படம் இந்த படம் இன்ஸ்பிரேசன்ல எடுக்கிரேனு சொல்லிட்டு இருக்காங்க விமர்சகர்கள்.

சரி கதை நாட் எடுப்போம். 

பாட்ஷா படத்தில அநீதி கண்டு பொங்கி எழுந்த ரஜினி, ஒரு சுயபாதிப்புக்கு பிறகு எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி வாழ்றாரு. ஒரு கட்டத்தில மீண்டும் பொங்கி எழும் சூழல். 

அப்டியே கொஞ்சம் பின்னாடி போவோம்.. சத்ரியன் படத்துக்கு வருவோம். தன்னோட சிறுவயசிலெ அநியாயம் கண்டு பொங்கி எழும் ஹீரோ தொடர்ந்து ஒரு காவல்துறை அதிகாரியாகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சுயபாதிப்பு ஏற்படுகிறது. எல்லாத்தையும் விட்டு விலகி ஒதுங்கி வாழ்றாரு. ஒரு கட்டத்தில் மீண்டும் பொங்கி எழும் சூழல்.

அப்டியே கொஞ்சம் முன்னாடி வருவோம் விக்ரம் படத்துக்கு போவோம். தன்னோட கடமையில கண்ணும் கருத்துமா இருக்கிற ஒரு அதிகாரி அதனால சுயபாதிப்பு அடையிறாரு. எல்லாத்தையும் விட்டு விலகி ஒதுங்கி வாழ்றாரு. ஒரு கட்டத்தில் மீண்டும் பொங்கி எழும் சூழல். ( இது ரெண்டு விக்ரமுக்கும் பொறுந்தும் ) 

இப்படி தமிழ் சினிமாவுல ஆயிரம் கதை சொல்ல முடியும். காதல் கதைனு எடுத்துகிட்டாலே ஒரு ரெண்டாயிரம் படம் ஒரே பாதிப்புல சொல்ல முடியும். 

சினிமாவுல ரெண்டு டைப்ல தான் அதிக இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒன்று நேரிடையா மசாலா படம்னு எடுக்கிறவங்க. இன்னொருத்தவங்க அந்த மசாலாவை வெளியே தெரியாம பூசி மொழுகி படம் எடுக்கிறவங்க. மூணாவது எண்ட இப்படி ஒரு கதை இருக்கு அதை நா இப்படித்தான் சொல்லுவேனு வந்து படம் எடுத்து அது யாருக்கும் தெரியாம பார்த்துகிறவங்க. விதிவிலக்கு வெற்றிகள் உண்டு. அத விட்றலாம். 

விசுவாசம், அண்ணாத்த, பிகிலு, ஜவான் படமெல்லாம் போஸ்டர் பார்த்தாலே சரி உள்ள என்ன பேச போறாங்கனு தெரிஞ்சுடும். அத போராடிக்காம சொல்றாங்களாங்கிறது தான் நாம கொடுத்த காசுக்கு வேலை. நமக்கும் வேலை. அதைவிட்டுட்டு கதை புதுசா இல்லை, ஓவர் ஹீரோயிசம், மசாலா .... அப்டி இப்டினு சொன்னா... எடுத்தவனை விட அத பார்த்துட்டு அப்டி சொல்றவங்க தான் முட்டாள் என்பேன். 


எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ மசாலா இயக்குனர்களில் வரிசையில் அட்லிக்கு முக்கிய இடம் உண்டு. விமர்சனமா நாம சும்மா கதறிட்டு இருக்கலாம். ஆனால் அவன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் இயக்குனர் லிஸ்ட்ல இருக்காரு தட்ஸ் இட்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...